search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்"

    பெரியநாயக்கன்பாளையம் அருகே மனைவி வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள காந்திநகர்7-வது வீதியை சேர்ந்தவர் பட்டு ராஜா (வயது 33). இவர் தனது வீட்டில் 11 வயது சிறுமியை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டு ராஜாவின் மனைவி வெளியூருக்கு சென்று இருந்தார்.

    அப்போது இரவு நேரத்தில் சிறுமியை பட்டுராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை சிறுமி அக்கம் பக்கத்தினரிடம் கூறி அழுதுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுமியை உக்கடத்தில் உள்ள தொன் போஸ்கோ அன்பு இல்லத்தில் சேர்த்தனர்.

    இது குறித்து அன்பு இல்ல நிர்வாகி கிருஷ்ணகுமாரி குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பட்டு ராஜா மீது பாலியல் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு கைது செய்தனர்.

    சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி கருப்பாயி. இவர்களது 13 வயது மகள் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை உப்படாபட்டியைச் சேர்ந்த அஜித் (17), திரவியம் (16) ஆகிய 2 பேர் வீடு புகுந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    சிறுமி கூச்சல் போட்டவுடன் சிறுமியின் தாயார் கருப்பாயி வீட்டுக்கு ஓடி வந்தார். அப்போது 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து கருப்பாயி மேலவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், திரவியம் ஆகிய 2 பேரையும் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×